நோதல் வேண்டாம் தோழர்களே! நோன்பு துறங்கள். பசித்திருந்தது போதும், உணவு எடுங்கள். காந்தியையே மறந்தவகளுக்கு காந்தியமொழி புரியாது; – நம்மைக் கருணைச் சரக்காய் பார்ப்பவருக்கு நம் கண்ணியம் எதுவும் தெரியாது. இன்று நம் முழக்கங்கள் நிறைக்கும் இந்த முற்றத்திற்கு நாம் முடிந்த மட்டும் எத்தனைமுறை வந்து சென்றோம், எண்ணிச் சொல்ல இயலுமா இவர்களால்? கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இடற்றும் பள்ளங்கள், ஏமாற்றும் மேடுகள், அரற்றும் சாலைகள் என அத்தனையும் கடந்து ஆண்டாண்டு கோரிக்கைகளோடு அலுவலகம் புகுந்தால் […]
Category: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்கிற வழக்கமான கோரிக்கை இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படாது
மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எந்நேரமும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருப்பார் என்று வாலி, மொழி போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டது தவறானது என்பதை அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக உணர்த்தும்.
உரையாடல்கள் வழியே சமூக விழிப்புணர்வைக் கட்டமைக்கிற முக்கியப் பணியை தனது முதன்மை இலக்காகக்கொண்டு, அறிவுத்தளத்தில் இயங்கிவரும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் டிசம்பர் மாத கூட்டம் “இலங்கையில் பார்வையற்றோர் நிலை” என்ற தலைப்பில் நடந்தேறியது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வாழ்வகம் என்ற பார்வையற்றோருக்கான இல்லத்தின் தலைவரும், யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறப்புக் கல்வியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றிவரும் திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். 1993ல் யாழ்ப்பாண பாடசாலையில் ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய திரு. ஆறுமுகம் இரவீந்திரன் அவர்கள், […]
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும்
ஜனவரி 4 உலக பிரெயில் நாள் மற்றும்
பார்வையற்றோருக்கான ஹெலன்கெல்லர் போட்டித் தேர்வு மையத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா:
சிறப்பு விருந்தினர்
சுய தொழில் செய்வோர் பணிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்கிற குறிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியு்ளது. உதாரணமாக, இரயில் வணிகம் செய்வோர், சாலையோர வணிகம் செய்வோர் எவ்வாறு பணிச்சான்று பெற இயலும்
மதிப்பிற்குரிய அரசியல் கட்சித் தலைவர்களே! ஊடக நண்பர்களே!
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்களிடையே உரையாடலினை நிகழ்த்தி, அவற்றின் சாராம்சமாக மாற்றுத்திறனாளிகள் அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்பார்க்கும் சில உரிமைசார் கோரிக்கைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அரசியல் கட்சிகள் இவற்றைக் கவனத்துடன் பரிசீலித்து, தங்கள் தேர்தல் செயல்திட்டத்தில் இடம்பெறச்செய்யுமாறும், ஊடக நண்பர்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளை செய்திகளாகப் பொதுத்தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமாறு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள்நலச்சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
டேராடூனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் செகந்தராபாத் மற்றும் கொல்கத்தா மண்டல மையங்களை மூடுவது என்கிற நடுவண் அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக ஊனமுற்றோருக்கான தேசியமேடை (NPRD) அறிவித்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் முரலிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நடுவண் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்கள் 1997ல் உருவாக்கப்பட்டவை. இந்த இரு மையங்களிலும், சமூக மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எண்ணற்ற பார்வையற்றோர் […]
மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளரின் அறிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் மற்றும் ரயில், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வசதிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.இவ்வழக்கு கடந்த அக்டோபர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2005ஆம் ஆண்டு முதல்,15 […]
