Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் Uncategorized

களம்: ஓங்கிய உரிமைக் குரல்கள், உடனுக்குடன் மாற்றம் பெற்ற அரசாணைகள்

மாற்றுத்திறனாளிகளின் தொடர் வலியுறுத்தல்களால் சில அண்மைய அரசாணைகள் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஜனவரி 2026 இறுதி நாட்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக, இனி கல்லூரி பயிலும் மாணவர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்ப் பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை ஆசிரியர்க் கல்வியியல் மாணவர்கள் இவர்களோடு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிவோர் பதிலி எழுத்தர்களாகத் தேர்வுகளை எழுதுவார்கள் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற […]