அந்த மாமனிதரின் அடிச்சுவடைப் பின்பற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதில் மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
682 பாடல்களைப் பாடி, தொடர்ந்து ஐம்பது மணிநேரம் இசைக்கச்சேரி நடத்தி, 48 மணிநேரம் தொடர்ந்து இசைக்கச்சேரி நடத்தி உலக சாதனை படைத்திருந்த ஹங்கேரி இசைக்குழுவின் சாதனையை, இவரது இசைக்குழு முறியடித்தது.
கடந்த ஆண்டின் முதல் அலையின்போதும், இதேபோன்று பணிவிலக்கு வழங்கப்பட்டது. எனினும் உரிய அரசாணைகள் வெளியிடுவதில் ஒவ்வொரு முறையும் ஏற்பட்ட தாமதங்களால், பணிவிலக்கு காலத்தின் சரிபாதி நாட்கள் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
நிறங்களின் மன்றம்
180 இடங்கள் என்ற திமுகவின் எதிர்பார்ப்பை மக்கள் பொய்யாக்கியிருக்கிறார்கள் என்றாலும், மக்கள் தந்திருக்கும் இந்த தீர்ப்பு பல்வேறு நிறங்கள் கொண்ட கட்சிகள், அவற்றின் குரல்கள் சட்டமன்றத்தில் ஒலிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இது ஜனநாயக விழுமியங்கள் பண்படுவதற்குப் பெரிதும் உதவும்.
பிறந்தநாள் பரிசு
பொதுவாக எங்கள் வீட்டில் யாருடைய பிறந்தநாளாக இருந்தாலும், என் அப்பாவின் பிறந்தநாள் முதல் கடைகுட்டி கிரிஸ்டோபர் பிறந்தநாள்வரை அந்த நாட்கள் ஒரே குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்ததாகவே இருக்கும்.
பெருகிவரும் கரோனா பரவலால், தேர்தல் வரலாற்றில் ஊரடங்கு காலத்தில் நிகழும் முதல் வாக்கு எண்ணிக்கையாக நாளைய நிகழ்வு இருக்கப்போகிறது.
ஆஸ்பெட்டாஸ் போடப்பட்ட பத்துக்குப் பத்து அளவிலான ஹால், சிறிய அளவிலான திண்ணையின் வலப்பக்கத்திலேயே சமையல்கட்டு என வரிசையாகக் கட்டப்பட்டிருந்த ஐந்து வீடுகளைக்கொண்ட காம்பவுண்டுக்குள் இரண்டாவதாகவும், மூவாயிரம் அதிகம் என்று சொல்லும்படிக்கு இருந்தது ராமுவின் வாடகை வீடு.
நான் உன்மீதான யோசனைகளிலேயே வெகுநேரமாக அமர்ந்திருந்ததோடு, என்மீதான உன்னுடைய காதலுக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சித்துக்கொண்டிருந்தேன்.
தி மிராக்கில் வொர்க்கர்
அன்பின் மொழி ஒன்றே, அது தொடுகை என்றவள்;
அறியாமை போக்கக் கொடு! கை என்றவள்.
அவளின் உள்ளங்கையை ஊடகமாக்கி,
இவளின் ஒற்றை விரலில் தூரிகை தேக்கி,
கற்றுக்கொள்ள சொல்லோவியக்
கலை படைத்தவள்; – ஹெலன்
பெற்றுக்கொண்ட உணர்வுக்கெல்லாம் ஒற்றைத் தாய் இவள்.
ஏப்ரல் 14: ஹெலன்கெல்லரை உலகறியச் செய்தவரான ஆனி சலிவன் மேசி (miracle worker) அவர்களின் 155ஆவது பிறந்த தினம் இன்று.
தற்போது கரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகத்தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. “அவசியம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம்” என முதல்வரே மக்களை அறிவுறுத்துகிறார்.
