இந்த முயற்சியை முன்னெடுத்த சங்கப் பொறுப்புத் தலைவர் திரு. அரங்கராஜா மற்றும் பொதுச்செயலாளர் திரு. மணிக்கண்ணன் அவர்களுக்க்உம், சங்கத்தின் இத்தகைய முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்திய சங்கம் சார் மற்றும் சாராதஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.
கல்வி பயிலும் மாணவர்கள்தான் என்றில்லாமல், பார்வையற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எளிய கடன் வசதித் திட்டத்தில் இந்தக் கருவியினை அரசு வழங்கலாம்.
லீசம்மா போலியோவாள் பாதிக்கப்பட்டு, 55 விழுக்காடு ஊனமுற்றவர். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊனமுற்றோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான பதவி உயர்வு மறுக்கப்பட்டு, பொதுப்பிரிவினருக்கு இணையாகவே அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
திரைப்படம்தான் என்றில்லை, தான் காணும் காட்சிகளை எனக்கு விவரிக்கிற நண்பனோ, நண்பியோ வாய்க்க வேண்டும் என்பது எனது இளமைப் பிராயத்தின் பெருங்கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது.
அஞ்சலிகள்: எபிநேசர் என்கிற புஷ்பநாதன்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் டிஇஎல்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. எபிநேசர் என்கிற புஷ்பநாதன் நேற்று மாலை இயற்கை எய்தினார். கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், அவர் உடல்நலிவுற்றமை குறித்தும், அவருக்கு உதவிகள் செய்திட முன்வருமாறும் சவால்முரசு வலைதளத்தில் ஒரு பதிவினை எழுதியிருந்தேன். தொடர்ச்சியாக அமல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சூழலில் எதுவும் கைகூடாமல் போனது வருத்தமாய் இருக்கிறது. எனினும், பதிவினைப் படித்த்உவிட்டு, பள்ளியின் முன்னால் ஆசிரியர்களான மறைந்த திரு. போஸ் மற்றும் மறைந்த […]
அலுவலர் மாற மாற நடைமுறையிலும் சில மாற்றங்கள். நாளுக்குநாள் விரிவடைந்த நிலையிலே பணிகள்.
தொடுதலையே தங்களின் இயக்கத்தில் முக்கிய ஆதாரமாகக்கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகக்கூடிய அதிக கெடுவாய்ப்பினை இயற்கையிலேயே பெற்றிருக்கின்றனர்.
இன்றும் கூட, உங்கள் அண்டை வீட்டில், உங்கள் தெருவில், ஊரில், உங்களின் உறவுகளில் என எத்தனையோ பார்வையற்ற அல்லது வாய் பேச இயலாத செல்விகளும், கண்ணாயிரம்களும் போதிய விழிப்புணர்வு இன்மையால், பிறந்துவிட்டதாலேயே, ஆயுளுக்கும் தூக்கிச் சுமக்கிற பாரமாய் அவர்களின் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.
பல அரசு அதிகாரிகள், ஏன் துறை அமைச்சர்கள் கூட நாங்கள் கோரிக்கை என்று அவர்களை நாடினால், கொஞ்சம் சத்தமாகப் பேசத் தொடங்கிவிடுவார்கள். அதாவது எங்களிடம் eye to eye contact செய்ய முடியாதாம். அதனால் உரத்துப் பேசிஎங்களுக்குப் புரியவைக்கிறார்களாம்.
ஈரோடு பள்ளி, சொந்தக் கட்டடத்தில் இயங்கிவரும் உண்டு உறைவிடப் பள்ளியாகும். போதுமான கட்டட வசதி, சரியான மாணவர் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை எனத் தன்னிறைவிலும் தரத்திலும் குன்றாத பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
