இன்றும் கூட, உங்கள் அண்டை வீட்டில், உங்கள் தெருவில், ஊரில், உங்களின் உறவுகளில் என எத்தனையோ பார்வையற்ற அல்லது வாய் பேச இயலாத செல்விகளும், கண்ணாயிரம்களும் போதிய விழிப்புணர்வு இன்மையால், பிறந்துவிட்டதாலேயே, ஆயுளுக்கும் தூக்கிச் சுமக்கிற பாரமாய் அவர்களின் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.
பல அரசு அதிகாரிகள், ஏன் துறை அமைச்சர்கள் கூட நாங்கள் கோரிக்கை என்று அவர்களை நாடினால், கொஞ்சம் சத்தமாகப் பேசத் தொடங்கிவிடுவார்கள். அதாவது எங்களிடம் eye to eye contact செய்ய முடியாதாம். அதனால் உரத்துப் பேசிஎங்களுக்குப் புரியவைக்கிறார்களாம்.
ஈரோடு பள்ளி, சொந்தக் கட்டடத்தில் இயங்கிவரும் உண்டு உறைவிடப் பள்ளியாகும். போதுமான கட்டட வசதி, சரியான மாணவர் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை எனத் தன்னிறைவிலும் தரத்திலும் குன்றாத பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm https://eregister.tnega.org/#/user/pass என்ற தமிழக அரசின் இந்த இரண்டு இணையதளங்களில் Capture Code Verification என்ற முறை பார்வையற்றோர் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என நமது சவால்முரசு தளத்தில் தமிழக அரசின் இணைய வடிவமைப்பாளர்கள் கவனத்திற்கு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில், capture code பகுதியில் ஒலிவடிவிலான தெரிவை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது இந்த இரண்டு இணையதளங்களிலும் capture code பகுதியில் ஒலிவடிவிலான தெரிவும் […]
வழிகாட்டு நெறிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி பயனாளிகளுக்கு Electronic Braille reader வழங்கப்பட வேண்டும்
அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர்களும் இதன் மூலம்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீங்கள் தடுப்பூசி எடுத்தபிறகு, உங்களைக் கண்டு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பயப்படும் பொழுது அவர்களுக்கு இந்தச் சூழலை எடுத்துரைத்து அவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
“முதல் அலை வந்தபோதே எப்போதாவது தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் கோவிட் வந்துவிட்டதோ என நினைப்பு வந்துபோனதுண்டு. அதாவது ஒரு பாம்பு மீது நமக்கிருக்கிற இயல்பான பயம்போல. ஒரு கயிறை மிதித்தாலே திடுக்கிடுவோமே அப்படி.
காலங்காலமாய் கண்டிருந்த கனவு
உண்மையில் சென்னையை ஒப்பிடுகையில், மதுரையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கும் கல்விசார் உதவிகள், நன்கொடை வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான்.
கற்க கசடற கலைஞரை
அவருக்கு அரசாணை அரசு விதிகளெல்லாமே எப்போதைக்கும் மீறக்கூடாத புனித கட்டளைகளாக இருந்ததில்லை. அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்பவும், பயனாளிகளின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, மிகத் தெளிவான அரசாணைகளை வெளியிடுவதில் கலைஞர் அரசுக்கு நிகரான மாநில அரசு இந்திய ஒன்றியத்திலேயே இல்லை.
2010க்கு முன், பாடப் புத்தகங்கள் தாண்டி, பிரெயிலில் வேறு புத்தகங்களைப் படித்திராத சில தலைமுறைப் பார்வையற்றவர்களுக்கு சினிமாதான் நாவல், செவ்விலக்கியம், நாட்டார் கதைகள் எல்லாம்.
