அரசு பிரெயில் வள மையம் ஒன்றை (State Braille Resource Centre) ஏற்படுத்துவது காலத்தின் உடனடித் தேவையாகும். உரியவர்கள் அரசுக்கு இதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
Category: braille education
சிறப்புப்பள்ளி விடுதிகளில் இப்போது எந்த மாணவரும் மாநிலச் செய்திகள், ஆகாஷவானி செய்திகள் கேட்பதில்லை. அதனால் வானோலிச் செய்திகள் பற்றிய ஒரு கருத்துருவாக்கமே மாணவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
ப்ரெய்லி தும்பி நூலின் முதல் அச்சுப்பிரதியை அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா தன்னுடைய கரங்களால் வெளியிட்டார்.
பார்வையற்றவர்களின் மொழிமனத்தில் பெருமாள், அடியார், தேவலோகம், ஆசி போன்ற சொற்களைவிட கர்த்தர், சீடர், பரமண்டலம், இரட்சிப்பு ஆகிய சொற்கள் இன்னும் அழுத்தமான மேடுறுத்தப்பட்ட அரூப உருவங்களாக படிந்திருக்கின்றன.
17 ஜூலை, 2020 நம்புராஜன் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இறுதித் தேர்வினை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களில் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான 520 பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களில் 497 பேரும், 592 செவித்திறன் குறையுடைய மாணவர்களில் 486 மாணவர்களும் வெற்றிபெற்றனர். 983 உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளில் 860 பேர் மற்றும் 740 இதர மாற்றுத்திறனாளிகளில் […]
16 ஜூலை, 2020 மாணவி காவியா தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அந்தப் பள்ளி நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. அந்தப் பள்ளியில் தங்கிப்பன்னிரண்டாம் வகுப்பு படித்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் காவியா 600 மதிப்பெண்களுக்கு 571 மதிப்பெண்கள் எடுத்து சாதனைபடைத்துள்ளார். ஆறு பாடங்களிலுமே தொன்னூறுக்கு மேல் பெற்றுள்ள காவியா, தமிழில் 98, வரலாறு […]
நன்றி இந்து தமிழ்த்திசை 21.ஆகஸ்ட்.2019மு.யுவராஜ் சென்னை சாதாரணப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பிரெய்லி கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, பயிற்சி பெற்ற சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட பல்வேறு வகை யான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக 10 அரசு சிறப்பு பள்ளிகள் பிரத்யேகமாக செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகள் […]
