மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்தவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கு விருது: தமிழக அரசு செய்தி வெளியீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்தவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கு விருது: தமிழக அரசு செய்தி வெளியீடு

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.1.2024) தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த சமூக பணியாளர் விருது, சிறந்த நிறுவனத்திற்கான விருது, சிறந்த ஆசிரியருக்கான விருது, சிறந்த பணியாளர் / சுய தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கான விருது, மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருது, சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்கள். உடன், மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் திருமதி.ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திரு.கமல் கிஷோர், இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.
பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *