கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்ட ஜெயஸ்ரீ முரலிதரன் இஆப அவர்களை சமூகநலத்துறை செயலராக மாறுதல் செய்து நேற்று 20 ஜனவரி, 2024 தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் புதிய செயலராக, நில நிர்வாகத்துறையின் ஆணையர் திரு. நாகராஜன் இஆப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிறப்பு: 8பிப்பரவரி, 1979.
ஊர்: திருநெல்வேலி.
ராஜஸ்தானில் உள்ள டாட்டா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் படித்த இவர், 2000 ஆம் ஆண்டு தனது முதல் குடிமைப்பணி தேர்வை எதிர்கொண்டார். முதல் முயற்சியில் நேர்முகத் தேர்வுவரை முன்னேறியவர், இரண்டாவது முயற்சியில் 137ஆவது இடம் பிடித்து, ரயில்வே துறையில் பணியில் சேர்ந்தார்.
அது 2005ஆம் ஆண்டு. ஐஏஎஸ் ஒன்றே தனது இறுதி மற்றும் உறுதியான இலக்கு என்பதை மனதில் பற்றிக்கொண்டு, நான்காவது முயற்சியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார் திரு. நாகராஜன்.
மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியிருக்கும் இவர், தமிழக அரசின் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மாற்றம் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ள டாராடாக் பொதுச்செயலாளர் திரு. நம்புராஜன், “திரு.S.நாகராஜன்,IAS மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் புதிய அரசு செயலாளராக நியமனம்! சிறந்த மனிதாபிமானி மற்றும் நிர்வாகி.! வரவேற்போம்.! அதே வேளையில்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளரை மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுவது ஏற்புடையதல்ல.
துறையின் பணிகளை முடக்கவே செய்யும்.! புதிய செயலாளராவது நீண்ட காலம் பணி செய்ய முதலமைச்சர் & தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்குள் ஐந்து மாற்றங்கள்
புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த 2021 மே முதல் இதுவரை, ஐந்துமுறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
- 24 மே, 2021-லால்வேனா இஆப
- 12 ஜூன், 2022-ஆனந்த்குமார் இஆப
- 19 ஆகஸ்ட், 2023-சைஜி தாமஸ் வைத்யன் இஆப
- 12 அக்டோபர், 2023-ஜெயஸ்ரீ முரலிதரன் இஆப
- 20 ஜனவரி, 2024-நாகராஜன் இஆப
Thank you, Thodugai for the information.
மாற்றுத்திறனாளிகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் கொடுக்கும் தொடுகை குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்