மாற்றுத்திறனாளிகள் மணவிழா: முதல்வர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

மாற்றுத்திறனாளிகள் மணவிழா: முதல்வர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று ( 20.11.2022 ) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து , அவர்களை வாழ்த்தினார் . இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி . கீதா ஜீவன் , நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி , சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் , பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் திரு.நே.சிற்றரசு , தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை தலைவர் முனைவர் பா . சிம்மசந்திரன் , செயலாளர் பேராசிரியர்
த . பொன்னுசாமி , பொருளாளர் திரு . டி . கருப்பையா , ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளையின் தலைவர் திரு . ஓம் . பிரகாஷ் மோடி , நிர்வாக அறங்காவலர்
திரு . மனு கோயல் , பொருளாளர் திரு . முராரிலால் சந்தோலியா , அறங்காவலர் திரு . சிவகுமார் கோயங்கா , அறக்கட்டளைகளின் நிர்வாகிகள் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர் .

முதல்வர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

  • மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையிலான கருவிகள் 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
  • நகர பேருந்துகளில் (White Board Bus) மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமில்லாமல் பயணம்.
  • UDD Card வழங்குவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 9 லட்சத்து 30 ஆயிரத்து 909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
  • 1096 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென 2021-2022ஆம் நிதியாண்டில் 813 கோடியே 63 இலட்ச ரூபாயும் 2022-23 நிதியாண்டில் 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் உலக வங்கி உதவியுடன் 6 ஆண்டு காலத்திற்கு 1702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்தின் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினையும் பரிசுத் தொகையாக, பாதித்தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தப்படும் வகையில் தடைகளற்ற சூழலை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் முழு செய்திக்குறிப்பையும் படிக்க:

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *