மனிதத் தன்மையற்ற இயந்திரங்கள் உலவும் இடமாக அந்த ஆணையரகத்தைச் சித்தரிக்கும் அவர், “இயந்திரங்கள்கூட” என ஒரு சுவையான முரண் தொடரை எழுதிச் செல்கிறார். அதை உரியவர்கள் படித்தாலும் உள்ளுக்குள் சிரிப்பு எழுவதையும் தங்களைத்தாங்களே தன்னிச்சையாகக் கிள்ளிப் பார்த்துக்கொள்வதையும் அவர்களால் தவிர்க்கவே இயலாது.
