பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
Category: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
“என் பின்னாலேயே வா மாப்ள” என்று சொன்னபடியே, தன் தோளில் கைவைத்து உடன் நடந்த கனகராஜை தனக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டு, வலக்கையில் பிடித்திருந்த ஸ்டிக்கைத் தன் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, வீட்டின் முன் கேட்டைத் திறந்தான் சசி. “மாப்ள இங்க செருப்பை விடு” என்று சொன்னவனிடம், “இது வீட்டோட முகப்பா சசி?” என அறியாதவனாய் கனகு கேட்டான். “இது கார் பார்க்கிங் மாப்ள”. “கார் நிறுத்தவா? அப்டினா, புதுசா கார் வாங்கியிருக்கியோ?” “அட நீ வேற. கார் […]
எப்பொழுதுமே பெரிதாக யாரையும் புகார் சொல்லாத குணம், அனைவருடனும் இணக்கமாகப் பழகும் இணிமையான பண்பு
சட்டென எழுந்து அமர்ந்தவன் கேட்டான். “இப்ப என்ன ஆயிடுச்சு. நெருப்புன்னா உதடு சுடுமா, தேனுனா நாக்கு இனிக்குமா” என்று சாதாரண குரலில் சொன்னான்.
உங்கள் சொற்பொழிவுகள் எதையும் கேட்டதில்லை. இறுதிகட்டப் போர் உச்சத்திலிருந்த காலகட்டங்களில் அவ்வப்போது பிபிசி தமிழில் உங்கள் குரலைக் கேட்டதாக ஒரு நினைவிருக்கிறது.
அவரைப் பார்த்ததும் ஆன் செய்த ரேடியோவைப் போல என் பள்ளிப் படிப்பு தொடங்கி எல்ஐசியில் வேலை கிடைக்காத கதைவரை அனைத்தையும் மளமளவெனக் கொட்டினேன்.
மீண்டும் மீண்டும் உளமார்ந்த வாழ்த்துகள்.
மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வழங்கியிருக்கிற பஸ் பாஸ் நிமித்தம், பேருந்து நடத்துனர்களிடம் அவமானப்படாத பார்வையற்றவர்களே தமிழகத்தில் இருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. அரசு வழங்குகிற ஒரு விலையில்லாத் திட்டத்தை அமல்ப்படுத்துவதில், ஏதோ தங்கள் வீட்டுச் சொத்தையே தாரைவார்ப்பதுபோல் புழுங்குகிறார்கள் பல நடத்துனர்கள்.
“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாது” என்கிறார் முதல்வர். ஆனால், துறையின் புரிதல் அற்ற தொடர் செயல்பாடுகளால் மாநிலத்தில் மனவருத்தம் அடையாத ஒரே ஒரு மாற்றுத்திறனாளிகூட இருக்க மாட்டார்களோ என்ற நிலை வந்துவிடும்போல.
பார்வையற்றோரின் மேம்பாட்டை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வரும் அறிவே துணை ஆய்வு மையத்தின் பொதுக்குழு கூட்டம், கடந்த 30-09-2024 அன்று கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் சிறப்புப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளை முன்னர் இருந்ததுபோல் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வருமாறு பார்வையற்றோருக்கான அறிவே துணை […]
