சிறந்தமுறையில் தேர்வெழுத அனைவருக்கும் வாழ்த்துகள்.
மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய வழக்குகள் குறித்த செய்திகள் மற்றும் தகவல்களின் தொகுப்பு
சிறந்தமுறையில் தேர்வெழுத அனைவருக்கும் வாழ்த்துகள்.
லீசம்மா போலியோவாள் பாதிக்கப்பட்டு, 55 விழுக்காடு ஊனமுற்றவர். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊனமுற்றோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான பதவி உயர்வு மறுக்கப்பட்டு, பொதுப்பிரிவினருக்கு இணையாகவே அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளரின் அறிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் மற்றும் ரயில், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வசதிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.இவ்வழக்கு கடந்த அக்டோபர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2005ஆம் ஆண்டு முதல்,15 […]
காதலிக்குச் சொல்வதாக அவன் ஏதேதோ உளற, அந்தப் பெண்ணோ அதையெல்லாம் பொறுமையாக எழுதுகிறாள். இடையிடையே அந்தப் பெண் கேட்கும் கேள்விகளுக்கு அவன் சொல்லும் சிறுபிள்ளைத்தனமான பதில்களையும் அவள் பொறுமையோடே கையாளுகிறாலாம். இதற்கெல்லாம் உச்சமாய் அந்தக் கடிதத்தை அவன் அவளுக்கே தரும்போதும் அவளுக்குக் கோபம் வரவில்லையாம். நம்புங்கள் இது ஏற்கனவே திட்டமிடப்படாத ப்ராங்காம்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது மாற்றுத் திறனாளி மாணவி பூர்ணசுந்தரி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. `என்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கெல்லாம் ஐ.ஏ.எஸ் கொடுக்கப்பட்டுள்ளது’ என்ற அவரது வாதம், கல்வியாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கல்வி நிறுவனங்கள், பொதுக்கட்டடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் தளங்களையும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றியமைப்பது தொடர்பாக, கடந்த 2005ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கூடுதல் வசதிகொண்ட பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை