“என் பின்னாலேயே வா மாப்ள” என்று சொன்னபடியே, தன் தோளில் கைவைத்து உடன் நடந்த கனகராஜை தனக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டு, வலக்கையில் பிடித்திருந்த ஸ்டிக்கைத் தன் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, வீட்டின் முன் கேட்டைத் திறந்தான் சசி. “மாப்ள இங்க செருப்பை விடு” என்று சொன்னவனிடம், “இது வீட்டோட முகப்பா சசி?” என அறியாதவனாய் கனகு கேட்டான். “இது கார் பார்க்கிங் மாப்ள”. “கார் நிறுத்தவா? அப்டினா, புதுசா கார் வாங்கியிருக்கியோ?” “அட நீ வேற. கார் […]
Category: ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்
மூடிய குளிர்ந்த அறையில், தரைவிரிப்பின் மென்மையோடு காலணிகளின் டொப் டொப் கதையாடல் கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது.
பள்ளியின் ஓர் உணவு இடைவேளையின்போது பாலு சார் ஃபோன் செய்தார். “தம்பி தமிழ்வாணா! அருப்புக்கோட்டைல ஃபிலிப்ஸ் சர்வீஸ் சென்டர் இருக்கா?” “ஏன் சார் என்ன விஷயம்?” “ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ வாங்கனும் தம்பி”. “என்ன சார் இன்னமுமா ரேடியோ கேட்குறீங்க?” “அட எனக்கில்லப்பா. ரோசி அக்காவுக்கு. உனக்கு நியாபகம் இருக்கா? மரியா ஹோம்ல இருந்தாங்களே. அவங்க ரொம்ப நாளா ரேடியோ ஒன்னு வேணும்னு கேட்டுட்டே இருக்காங்க. ஃபிலிப்ஸ்தான் நல்ல தரமாவும் சரியாவும் இருக்கும். நீ அருப்புக்கோட்டைல […]
ப. சரவணமணிகண்டன்
ப. சரவணமணிகண்டன்
நேரம் அதிகமாகிக்கொண்டே இருப்பது அகிலாவுக்கு கவலையாக இருந்தது. உரையாடலை முடித்துக்கொண்டு கிளம்பும் நோக்கத்தோடு, “சரிங்க டீச்சர், நீங்க இவன் அப்பா நம்பர் கொடுங்க, நாங்க பேசிப்பார்க்கிறோம்” என்றாள்.
ஆஸ்பெட்டாஸ் போடப்பட்ட பத்துக்குப் பத்து அளவிலான ஹால், சிறிய அளவிலான திண்ணையின் வலப்பக்கத்திலேயே சமையல்கட்டு என வரிசையாகக் கட்டப்பட்டிருந்த ஐந்து வீடுகளைக்கொண்ட காம்பவுண்டுக்குள் இரண்டாவதாகவும், மூவாயிரம் அதிகம் என்று சொல்லும்படிக்கு இருந்தது ராமுவின் வாடகை வீடு.
சீரற்ற அவள் எண்ண ஓட்டங்கள் முன்னும் பின்னுமாய் அவளைப் பந்தாடுகின்றன. டீவியில் யார் யாரோ இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகை ராதிகா குரல் மட்டும்தான் அவளுக்குப் பரிட்சயம். “தாங்க முடியலையே சார்” பிரமிட் நடராஜன் சொன்னபோது அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.
