தமிழக அரசால் நேற்று 21 ஐஏஎஸ்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள், சமூகப் பாதுகாப்புத்துறையின் ஆணையராகப் பணியாற்றிவரும் திரு. R. லால்வீனா ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போதைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் திரு. விஜயராஜ்குமார் ஐஏஎஸ் அவர்களுக்குப் பதிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Author: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்திருக்கும் இந்த 20 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக மேற்கண்ட நடவடிக்கைகளை நாமும் பட்டியலிடலாம்.
தமிழக அரசு மாவட்ட அளவில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையங்களின் தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. பார்வை மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை ஒருங்குறி வடிவில் கொடுத்துள்ளோம். குறிப்பு-முதல்நாள் வழங்கப்பட்ட எண்களில் சில மாற்றங்களைச் செய்து, தமிழக அரசு புதிய பட்டியலினை இன்று 20 மே 2021 வெளியிட்டுள்ளது. எனவே முந்தைய பட்டியல் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணையைப் படிக்க ஒருங்குறி வடிவில் K. ஜெயநிதி
தனியாள் இடைவெளிகள் கராராகப் பேணப்பட வேண்டிய இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையத்திற்கு வரவேண்டும் என அரசு எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.
தூய்மையான, வெளிப்படையான ஆட்சியாக நடத்த நான் விரும்புகிறேன். விரும்புவதோடு மட்டுமில்ல, தூய்மையான வெளிப்படையான ஆட்சியை நடத்துவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மறுவாழ்வு அலுவலர்களும் தங்கள் அலைபேசித் தொடர்பு எண்களை வழங்க முன்வரலாம்.
அந்த மாமனிதரின் அடிச்சுவடைப் பின்பற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதில் மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
682 பாடல்களைப் பாடி, தொடர்ந்து ஐம்பது மணிநேரம் இசைக்கச்சேரி நடத்தி, 48 மணிநேரம் தொடர்ந்து இசைக்கச்சேரி நடத்தி உலக சாதனை படைத்திருந்த ஹங்கேரி இசைக்குழுவின் சாதனையை, இவரது இசைக்குழு முறியடித்தது.
கடந்த ஆண்டின் முதல் அலையின்போதும், இதேபோன்று பணிவிலக்கு வழங்கப்பட்டது. எனினும் உரிய அரசாணைகள் வெளியிடுவதில் ஒவ்வொரு முறையும் ஏற்பட்ட தாமதங்களால், பணிவிலக்கு காலத்தின் சரிபாதி நாட்கள் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
நிறங்களின் மன்றம்
180 இடங்கள் என்ற திமுகவின் எதிர்பார்ப்பை மக்கள் பொய்யாக்கியிருக்கிறார்கள் என்றாலும், மக்கள் தந்திருக்கும் இந்த தீர்ப்பு பல்வேறு நிறங்கள் கொண்ட கட்சிகள், அவற்றின் குரல்கள் சட்டமன்றத்தில் ஒலிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இது ஜனநாயக விழுமியங்கள் பண்படுவதற்குப் பெரிதும் உதவும்.
