அவரைப் பார்த்ததும் ஆன் செய்த ரேடியோவைப் போல என் பள்ளிப் படிப்பு தொடங்கி எல்ஐசியில் வேலை கிடைக்காத கதைவரை அனைத்தையும் மளமளவெனக் கொட்டினேன்.
அவரைப் பார்த்ததும் ஆன் செய்த ரேடியோவைப் போல என் பள்ளிப் படிப்பு தொடங்கி எல்ஐசியில் வேலை கிடைக்காத கதைவரை அனைத்தையும் மளமளவெனக் கொட்டினேன்.
மீண்டும் மீண்டும் உளமார்ந்த வாழ்த்துகள்.
மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வழங்கியிருக்கிற பஸ் பாஸ் நிமித்தம், பேருந்து நடத்துனர்களிடம் அவமானப்படாத பார்வையற்றவர்களே தமிழகத்தில் இருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. அரசு வழங்குகிற ஒரு விலையில்லாத் திட்டத்தை அமல்ப்படுத்துவதில், ஏதோ தங்கள் வீட்டுச் சொத்தையே தாரைவார்ப்பதுபோல் புழுங்குகிறார்கள் பல நடத்துனர்கள்.
“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாது” என்கிறார் முதல்வர். ஆனால், துறையின் புரிதல் அற்ற தொடர் செயல்பாடுகளால் மாநிலத்தில் மனவருத்தம் அடையாத ஒரே ஒரு மாற்றுத்திறனாளிகூட இருக்க மாட்டார்களோ என்ற நிலை வந்துவிடும்போல.
பார்வையற்றோரின் மேம்பாட்டை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வரும் அறிவே துணை ஆய்வு மையத்தின் பொதுக்குழு கூட்டம், கடந்த 30-09-2024 அன்று கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் சிறப்புப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளை முன்னர் இருந்ததுபோல் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வருமாறு பார்வையற்றோருக்கான அறிவே துணை […]