Categories
இலக்கியம் கவிதைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023

கவிதை: பெண்ணின் மறுபக்கம்

வாசகர்களே! உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனு்ப்பிவையுங்கள்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள

அன்புடையாள் என்பார்கள்; – ஆனால்

அடிமை செய்து பார்ப்பார்கள்.

அமைதியும் பேரழகும்

கொண்டவள் என்பார்கள்;

அடுத்த கணமே,

அமங்கலவதி என்று

அவையில் தள்ளி வைப்பார்கள்.

இரக்கம், ஈகைக்

குணம் பெற்றவள் என்பார்கள்;

 நாட்கள் கடந்ததும்

ஈனப்பிறவி என்பார்கள்.

உண்மையும் ஊக்கமும்

உறுதியும் உடையவள் என்பார்கள்; – ஆனால்

உருகுவதுபோல் நடித்து

வஞ்சனை செய்து

வேடிக்கை பார்ப்பார்கள்.

பெண்ணின் சேவை

தேவை என்பார்கள்; – பிறகு

மோகம் தீர்ந்த பின்பு

மேகத்தில் பறப்பார்கள்.

பெண் பாலினத்தை பாழாக்கி

பாதாளத்தில் அமிழ்த்துவார்கள்; – மறுபக்கம்

பட்டியல் நீளத்தின்

பக்கமோ முடிவிராது.

ஆணினமே!

உனக்கு ஒரு வேண்டுகோள்!

 எங்களின் உணர்வை மதி! 

அதுவே உன் மனதுக்கு நீதி!

மங்கை இனி எப்போதும்

ஓயாது ஓடிக்கொண்டிருக்கும்

புனித கங்கை;

வாழ்வில் நீர் அல்லவோ வேங்கை.

லட்சங்களில் ஒருத்தியாய்

இருந்து விடாதே! – உன்

இலட்சியத்தில் முனைப்பாய் இரு;

சாதிக்கு பிறந்தவள் அல்ல

 சாதிக்கப் பிறந்தவள் நீ!

நம் அடையாளச் சின்னம்

வானளவும் உயரட்டும்!

வாழ்க பெண்மை !

***தொடர்புக்கு: teporalakshmi@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.