கவிதை: காதலிப்பதும் சுகமே!

கவிதை: காதலிப்பதும் சுகமே!

ஆக்கம் ச. சந்தோஷ்குமார் வெளியிடப்பட்டது
விரல் பிடித்து நிற்கும் காதலர்கள்

காதலிப்பதும் சுகமே!! – அது

கடவுள் கொடுத்த ஒரு வரமே!!

காதலில் ஜெயிக்கத் தேவை பொறுமை!!

காதலிக்கும் அனைவருக்கும் புரியும் இதன் அருமை!!

காதல் ஜாதி மதத்தை ஒழிக்கும்!!

காதலில் வென்றால் மனம் அளவின்றி குதூகளிக்கும்!!

சம்மந்தமே இல்லாத ஒருவருக்காக

இதயம் துடிக்கும்!!

அவர்களுக்கு ஒன்று என்றால்

கண்கள் அளவின்றி நீரை வடிக்கும்!!

காதலிப்பவர்களுக்கு அதிகமாக வருவது கனவு!!

காரணம் காதல் என்பது ஒரு உணர்வு!!

முதலில் இருக்க வேண்டும் சரியான தேர்வு!!

இல்லையேல் ஏற்படும் மன முறிவு!!

காதல் எவ்வித பந்தமும் இன்றி வருவது!!

அது கலப்படமில்லாத அன்பை தருவது!!

இதில் கிடையாது

இனம் மொழி போன்ற வேறுபாடு!!

இதில் நிச்சயமாக கிடையாது

எவ்வித பாகுபாடும்!!

மனதில் ஏக்கத்தோடு

நான் சிங்கிள் என்று

கெத்தாக வாழ்வதைவிட!!

நேர்மையாக காதலித்து

வாழ்வை ஒர்க் தாக வாழ்வோம்

இக்கவிதை சிலருக்கு

எரிச்சலை கூட்டியிருக்கும்

ஒவ்வொரு வரியும்!!

உண்மையாக காதலிப்பவருக்கே

 இதன் அர்த்தம் புரியும்!!

காதலிப்போம்

அன்பால் கலந்து இருப்போம்.

தொடர்புக்கு: Smsanthosh7198@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *