தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர்கள் கொண்டாடிய ஆசிரியர்தின விழா ஒரு முன்னோடி முயற்சியாகும். இணைய வழியில் வழக்கமான தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தாலும், ஒரு குறுகிய காலத்தில் வெவ்வேறு தரப்பினரை ஒருங்கிணைத்து மாணவர்கள் இதைச்சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததில் மோசஸ்ராஜ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரின் பங்கு போற்றுதலுக்குரியது. இருவருமே ஆர்வமிக்க மாணவர்கள். இருவரின் பேச்சிலும் ஒரு ஒழுங்கு கைகூடத் தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் கவனமாக தங்களின் உரைகளைத் தொகுத்துக்கொள்ள ஆரம்பித்தால், எதிர்காலத்தில் இருவரும் தவிர்க்க இயலாத பேச்சாளர்களாக மிளிரும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
