வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
| படம் காப்புரிமை getty images |
நேற்று (பிப்ரவரி 1) நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் 2020-2021ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 9500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தனியாள் வருமானவரி தொடர்பாகப் புதிய வருமானவரித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 500000 வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமானவரியிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம், பழைய வருமானவரித்திட்டத்தில் வரிவிலக்கு வழங்கப்பட்டிருந்த அம்சங்களில் 70க்கும் மேற்பட்டவை நீக்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
புதிய வருமானவரித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் நிலையான கழிவு (standard deduction), வீட்டுக்கடனுக்கான வட்டியைக் கழித்தல் போன்றவற்றோடு, பிரிவு 80DD மூலம் கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ செலவுகள் மற்றும் பிரிவு 80G மூலம் தொண்டுநிறுவனங்களுக்கு நன்கொடை தருவதால் பெறப்படும் வரிச்சலுகைகளை பெற இயலாது. அரசின் இத்தகைய நடவடிக்கைகள், மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து மிகப்பெரிய பாதிப்புகளை எற்படுத்தக்கூடியவை என்பதால், இவை புதிய திட்டம் என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு எதிராகப் புகுத்தப்பட்டிருக்கிற அநீதியாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இந்தப் புதிய வரிவிதிப்பு என்பது ஒரு தெரிவாக மட்டுமே இருப்பதால், “இப்போதைக்குத் தப்பித்தோம்” என்ற உணர்வை பொதுமக்களிடமும் மாற்றுத்திறனாளிகளிடமும் ஏற்படுத்தியுள்ளது.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
