ஆன் சலிவன் இல்லையேல் ஹெலன் கெல்லர் என்று ஒருவர் இல்லை என்பதே நிதர்சனம்!
இம்மையத்தில்உள்ள அனைத்து ஆன் சலிவன்களுக்கும்
இக்கவிதை சமர்ப்பணம்!
Tag: poem
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல்ப்பரிசு பெற்ற கவிஞர் செல்வி. நாகேஸ்வரி அவர்களின் கவிதை. சிலிர்க்கவைக்கும் குளிரழகு, – வியர்வை துளிர்க்கவைக்கும் வெயிலழகு! மலர்களின் மணமழகு, மெய் தீண்டும் காற்றழகு! வளர்ந்து நிற்கும் மரமழகு, – அந்த மரங்கள் தரும் நிழலழகு! பறவைகளின் ஒலியழகு, பாய்ந்துவரும் அலையழகு! படிப்பென்றால் வரிகள் அழகு, நடிப்பென்றால் வசனம் அழகு! பேச்சென்றால் குரலழகு, – பாடும் பாட்டென்றால் ராகம் அழகு! அநீதியற்ற நாடழகு, […]
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை, நமது உரிமைகளைப்பேசும், இந்த உலகிற்கு நம்மை எடுத்துச் சொல்லும் ஒரு சரியான களமாக படைக்க விழைகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அந்த வகையில், நமது அன்றாட வாழ்வியலை, சமூகம் சார் பிரச்சனைகளை, நம் அகம் சார் ஏக்கங்கள் மற்றும் நிறைவுகளைத் தொகுக்கும் முயற்சியாக கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் இடம்பெறுகின்றன.
