கல்வி நிறுவனங்கள், பொதுக்கட்டடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் தளங்களையும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றியமைப்பது தொடர்பாக, கடந்த 2005ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கூடுதல் வசதிகொண்ட பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
