நன்றி இந்து தமிழ்த்திசை அரியலூர் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி. அரியலூர் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி […]
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மதச்சார்பு, வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் அமைப்புகளின் தலைவர்களான எஸ். நம்புராஜன், பி.எஸ். பாரதி அண்ணா, பேரா.தீபக், பி.மனோகரன், இ.கே. ஜமால் அலி உள்ளிட்ட தலைவர்களும், மருத்துவம், பொறியியல், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து செயல்பட்டு வரக்கூடிய பின்கண்ட மாற்றுத்திறனாளி பிரபலங்களும் இணைந்துள்ளனர். இந்த ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
scanned images by selvam K.want to read this in Tamil, click hereவெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, அதன் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களால் வெளியிடப்பட்டது. விவசாயத்திற்கான, தனி பட்ஜெட், பள்ளிக்கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் போன்ற மக்களால் பெரிதும் வரவேற்க்கப்படக்கூடிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதுபோலவே, அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ். அவை; 1. ஊனத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுக்க, அரசியல் சாசன பிரிவுகள் 15, 16 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். 2. அனைத்து […]
நன்றி விகடன்.com ஆட்டிசம்… எப்படி இனம் காண்பது, எந்தெந்த மருந்துகள் குணப்படுத்த உதவும், எங்கெல்லாம் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இக்கட்டுரை… தமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்…! – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்! #WorldAutismAwarenessDay ஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன்? புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதனாலேயே ஆட்டிசம் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் […]
மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுநன்றி இந்து தமிழ்த்திசைசென்னை வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போதும், மாற்றுத்திற னாளிகள் வாக்களிப்பதற்கு வசதி யாக வாக்குப்பதிவு மையங்களில் சாய்வுதளம் அமைப்பது, இரு சக்கர நாற்காலிகள், பிரெய்லி வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் […]
நன்றி இந்து தமிழ்த்திசை புதுக்கோட்டை புதுக்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் அரசுப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று கணினி வழங்கினார். புதுக்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் அரசு நடுநிலைப் பள்ளியில் 43 மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு, அண்மையில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜாவிடம் தங்களுக்கு கணினி வாங்கித் தருமாறு மாண வர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனது சொந்த செலவில் ஒரு கணினியை வாங்கி நேற்று அப்பள்ளிக்கு […]
மக்களவைத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. பொது மக்களை எப்படிக் கவர்வது, எந்த அறிவிப்பு பெருவாரியான மக்களின் வாக்குகளைத் தங்கள் பக்கம் கொண்டுவரும் என அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் சிந்தித்துக்கொண்டிருக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் முன்மாதிரியாய், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கோடு, மாக்சிஸ்ட் கம்நியூஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிவந்திருக்கிறது. தேர்தல் அறிக்கையைப் பார்வை மாற்றுத்திறனாளிகளும் படித்து அறிந்துகொள்ளும் வகையில், அதனை ஒலிவடிவில் வெளியிட்டிருக்கிறது சிபிஎம். பொதுவுடைமைக் கட்சியின் இந்த முன்னெடுப்பை மனதாரப் பாராட்டி […]
பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம் 22/05/2019 – 26/05/2019அறிவிப்பை முழுமையாக படித்தபின் பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.முதலில் பதிவு செய்யும் 50 பங்கேற்பாளர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.பதிவு செய்ய கடைசி நாள்: 05/05/2019.அன்புடையீர்,அரிமா சங்கங்கள் மற்றும் ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் பார்வையற்றோர் நலனில் ஈடுபாடுடைய சிறந்த கல்வி நிறுவனத்தோடு இணைந்து நடத்தும், பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 22/05/2019 புதன் முதல் 26/05/2019 ஞாயிறு வரை நடைபெற உள்ளது. தங்குமிடம் உணவு உள்ளிட்ட […]
