Categories
differently abled department

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்

மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுநன்றி இந்து தமிழ்த்திசைசென்னை வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போதும், மாற்றுத்திற னாளிகள் வாக்களிப்பதற்கு வசதி யாக வாக்குப்பதிவு மையங்களில் சாய்வுதளம் அமைப்பது, இரு சக்கர நாற்காலிகள், பிரெய்லி வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் […]

Categories
special schools

பார்வையற்றோர் பள்ளிக்கு கணினி: முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார்

நன்றி இந்து தமிழ்த்திசை புதுக்கோட்டை புதுக்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் அரசுப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று கணினி வழங்கினார். புதுக்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் அரசு நடுநிலைப் பள்ளியில் 43 மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு, அண்மையில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜாவிடம் தங்களுக்கு கணினி வாங்கித் தருமாறு மாண வர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனது சொந்த செலவில் ஒரு கணினியை வாங்கி நேற்று அப்பள்ளிக்கு […]

Categories
association statements

வரவேற்க்கப்பட வேண்டிய முன்னோடி நடவடிக்கை: – ப. சரவணமணிகண்டன்

மக்களவைத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. பொது மக்களை எப்படிக் கவர்வது, எந்த அறிவிப்பு பெருவாரியான மக்களின் வாக்குகளைத் தங்கள் பக்கம் கொண்டுவரும் என அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் சிந்தித்துக்கொண்டிருக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் முன்மாதிரியாய், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கோடு, மாக்சிஸ்ட் கம்நியூஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிவந்திருக்கிறது. தேர்தல் அறிக்கையைப் பார்வை மாற்றுத்திறனாளிகளும் படித்து அறிந்துகொள்ளும் வகையில், அதனை ஒலிவடிவில் வெளியிட்டிருக்கிறது சிபிஎம். பொதுவுடைமைக் கட்சியின் இந்த முன்னெடுப்பை மனதாரப் பாராட்டி […]

Categories
important programs

பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம்

பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம் 22/05/2019 – 26/05/2019அறிவிப்பை முழுமையாக படித்தபின் பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.முதலில் பதிவு செய்யும் 50 பங்கேற்பாளர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.பதிவு செய்ய கடைசி நாள்: 05/05/2019.அன்புடையீர்,அரிமா சங்கங்கள் மற்றும்  ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் பார்வையற்றோர் நலனில் ஈடுபாடுடைய சிறந்த கல்வி நிறுவனத்தோடு இணைந்து நடத்தும், பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 22/05/2019 புதன் முதல் 26/05/2019 ஞாயிறு வரை நடைபெற உள்ளது. தங்குமிடம் உணவு உள்ளிட்ட  […]

Categories
சவால்முரசு

இயலாமை இனிஇல்லை; – அதிகம் பகிருவோம்:

 சமர்த்தனம்-டிரஸ்ட் சென்னை சென்னை வேளச்சேரியில் முற்றிலும் இலவசமாக மாற்றுத்திறனாளிகளுக்கு (Ortho & SHI) மற்றும் பெண்கள் (மாற்றுத்திறனாளி அல்லாத பெண்களும் விண்ணப்பிக்க முடியும் ) பயிற்சியளித்து வேலை வாய்ப்பை உருவாக்கி வரும் சமர்த்தனம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் 12வது அணியின் பயிற்சிக்கான சேர்க்கை 25/03/2019 அன்று துவங்குகிறது. பயிற்சிக் காலம் 3 மாதம். தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாற்றுத்திறனாளிகள் வந்து கலந்து கொள்ளலாம்.கலந்து கொள்வதர்கான வயது வரம்பு 18 to 35 வரை. மாற்றுத்திறனாளிகள் தங்கிப் […]

Categories
சவால்முரசு

அரசு பொது நூலக துறை மாற்றுத்திறனாளிகள் ஊழியர் சங்க மாநில குழுக்கூட்டம் பெரம்பலூர்…GPLDAEA

அரசு பொது நூலக துறை சங்க மாநில குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் B.பாரதிஅண்ணா.மாநில செயலாளர்.P.சரவணன்.மாநில பொருளாளர்.N.நாகராஜன். துணை தலைவர்கள். J.ஜெயக்குமார். K.சண்முகநாதன். P.சீத்தாலட்சுமி. S.K.மாரியப்பன்.இணை செயலாளர்கள்: S.ராஜதுரை. S.முருகன். தஞ்சாவூர்.ஸ்டாலின் மற்றும் சிவாஜி. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் பின் வருமாறு…1,கிராமப்புற நூலக பணியாளர்கள் அவர்களுக்கு முழு கால முறை ஊதியம் கொடுக்க வேண்டும்.2, 2500 சிறப்பு பயணப்படி மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.3, மாற்றுத்திறனாளிகளுக்கு பணியிடை மாற்றம்/மாற்றுப்பணி மாற்றுத்திறனாளி அடிப்படையில் […]

Categories
சவால்முரசு

மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரகத்தில் குறிப்பிட்ட மத வழிபாடு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!

சென்னை:மெரினா கடற்கரை சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அலுவலகத்தில், கடந்த மார்ச் 13 அன்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த புரோகிதர்களை அழைத்து, பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், எனவே, அதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம், மாநில தேர்தல் ஆணையருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக்கடிதம் இதோ!“அன்புடையீர் வணக்கம். பொருள்: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வேளையில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரகத்தில் […]

Categories
சவால்முரசு

மாற்றுத்திறனாளி பெண்களுக்கு அஞ்சல் துறையில் சிறப்பு பயிற்சி

மார்ச் 31-க்குள் 250 பேரை சேர்க்க இலக்கு நிர்ணயம் , ப.முரளிதரன் , சென்னை நன்றி இந்து தமிழ்த்திசை அஞ்சல்தலைகளை ஒட்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மீனவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள். அஞ்சல் துறையில் தற்காலிக அடிப்படை யில் வேலை செய்வதற்கு மீனவர்கள் குடும் பத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை நகர மத்திய மண்டல அஞ்சல்துறை சார்பில், மீனவப் பெண்களின் […]

Categories
சவால்முரசு

ஒரு முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளை  அரசியல் நையாண்டிக்கும் உவமைக்கும் பயன்படுத்துவதை கண்டித்து! மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில்இன்று கண்டன  ஆர்ப்பாட்டம்! நாள்: – மார்ச்-20, புதன் மாலை 4 மணி!  இடம்: – சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை! மாற்றுத்திறனாளிகளே அணிதிரள்வீர்!   ஜனநாயக சக்திகளே ஆதரவு தாரீர்! வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
சவால்முரசு

கால்வாயில் விழுந்த பெண் உயிரிழப்பு

நன்றி இந்து தமிழ்த்திசை அரக்கோணம்  அரக்கோணம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அம்சா (45). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அருகில் உள்ள கால்வாயில் அவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விரைந்து சென்று அம்சாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் கால் தவறி விழுந்ததில் கால்வாய் நீரில் […]