Categories
இதழிலிருந்து கல்வி

துண்டு துண்டாய் திருத்தங்கள், துண்டாடப்படுகிறதா ஊனமுற்றோருக்கான கல்வி?

எந்த கல்விக்கொள்கை அருகாமைப் பள்ளிகளை அகற்றிவிடத் துடிக்கிறதோ, எந்தக் கல்விக் கொள்கையால் சிறப்புக் கல்வி என்ற வார்த்தையே வஞ்சிக்கப்பட்டிருக்கிறதோ அதே கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஊனமுற்றோருக்கான கல்வியையும் வணிகமயமாக்கத் துடிக்கிறது நடுவண் அரசு.

Categories
செய்தி உலா வகைப்படுத்தப்படாதது

மண்டல மையங்களை மூடும் “முடிவைக் கைவிட வேண்டும்” நடுவண் அரசுக்கு என்பிஆர்டி எச்சரிக்கை

டேராடூனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் செகந்தராபாத் மற்றும் கொல்கத்தா மண்டல மையங்களை மூடுவது என்கிற நடுவண் அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக ஊனமுற்றோருக்கான தேசியமேடை (NPRD) அறிவித்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் முரலிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நடுவண் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்கள்  1997ல் உருவாக்கப்பட்டவை. இந்த இரு மையங்களிலும், சமூக மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எண்ணற்ற பார்வையற்றோர் […]

Categories
வகைப்படுத்தப்படாதது

உதவித்தொகை பட்டுவாடா – அரசு வங்கிகளுக்கு பதில் தனியார் வங்கியா? புதிய திட்டத்தை கைவிடக் கோரி முதல்வருக்கு டாராடாக் கடிதம்

மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோர் சமூகப்பாதுகாப்பு மாத உதவித்தொகையை, அரசுடைமை வங்கிகளுக்கு பதில் தபால்துறை அலுவலகங்களை பயன்படுத்தும் தனியார் வங்கி மூலம் பட்டுவாடா செய்ய முடிவெடுத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த முயற்சியினைக் கைவிட வேண்டும் எனவும் முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, “சமூகப்பாதுகாப்பு உதவித்தொகை 2012 ஆம் ஆண்டு முதல் அரசுடைமை வங்கிகளில் தமிழக அரசு பணம் செலுத்தி, தனியார் சேவை முகவர்கள் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு […]

Categories
செய்தி உலா வழக்குகள்

நன்றி மின்னம்பலம்: மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகள்: அரசின் பதிலால் நீதிமன்றம் அதிருப்தி!

மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளரின் அறிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் மற்றும் ரயில், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வசதிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.இவ்வழக்கு கடந்த அக்டோபர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2005ஆம் ஆண்டு முதல்,15 […]

Categories
இதழிலிருந்து செய்தி உலா வழக்குகள்

வருத்தம் தெரிவியுங்கள்! இல்லையென்றால் வழக்கு தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை:

காதலிக்குச் சொல்வதாக அவன் ஏதேதோ உளற, அந்தப் பெண்ணோ அதையெல்லாம் பொறுமையாக எழுதுகிறாள். இடையிடையே அந்தப் பெண் கேட்கும் கேள்விகளுக்கு அவன் சொல்லும் சிறுபிள்ளைத்தனமான பதில்களையும் அவள் பொறுமையோடே கையாளுகிறாலாம். இதற்கெல்லாம் உச்சமாய் அந்தக் கடிதத்தை அவன் அவளுக்கே தரும்போதும் அவளுக்குக் கோபம் வரவில்லையாம். நம்புங்கள் இது ஏற்கனவே திட்டமிடப்படாத ப்ராங்காம்.

Categories
அணுகல் இதழிலிருந்து

சாமானியனின் பக்கங்கள்: நிற்பதற்கே, நடப்பதற்கே, படிப்பதற்கே!

இது ஒன்றும் பிஸ்கட் சமாச்சாரம் இல்லை, இது மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சனை. அவர்களின் நடத்தல், படித்தல் போன்ற இயல்பான அடிப்படைச் செயல்பாடுகளையே இந்த வரி விதிப்பு முடக்கிப்போடுகிறது

Categories
செய்தி உலா வாசகர் பக்கம்

வாசகர் பக்கம்: என் அகவிழிப் பார்வையில் அழகு என்பது யாதெனில்!

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல்ப்பரிசு பெற்ற கவிஞர் செல்வி. நாகேஸ்வரி அவர்களின் கவிதை. சிலிர்க்கவைக்கும் குளிரழகு, – வியர்வை துளிர்க்கவைக்கும் வெயிலழகு! மலர்களின் மணமழகு, மெய் தீண்டும் காற்றழகு! வளர்ந்து நிற்கும் மரமழகு, – அந்த மரங்கள் தரும் நிழலழகு! பறவைகளின் ஒலியழகு, பாய்ந்துவரும் அலையழகு! படிப்பென்றால் வரிகள் அழகு, நடிப்பென்றால் வசனம் அழகு! பேச்சென்றால் குரலழகு, – பாடும் பாட்டென்றால் ராகம் அழகு! அநீதியற்ற நாடழகு, […]

Categories
உதவிகள் செய்தி உலா வகைப்படுத்தப்படாதது

`விகடன் செய்தி, கலெக்டர் நடவடிக்கை… இப்ப பார்வை கிடைச்சிடுச்சு!’ – நெகிழும் குழந்தைகள்

”எங்க அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. இந்த உதவி எங்களுக்குக் கிடைக்கக் காரணமா இருந்த விகடன், கலெக்டர் சார் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டிருப்போம்.”பேராவூரணி அருகே, பெற்றோர் இல்லாத நிலையில் வாழ வழியில்லாமல், பார்வைக் குறைபாடுடைய சிறுமி தனது அண்ணனுடன் தவித்து வருவது குறித்து விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் எடுத்த நடவடிக்கைக்குப் பிறகு, தற்போது அந்தச் சிறுமிக்கு சிகிச்சையும் பார்வையும் கிடைத்திருப்பதுடன், பல்வேறு உதவிகளும் கிடைத்து வருவதாக சிறுமியின் தரப்பில் நெகிழ்ச்சியுடன் […]

Categories
வகைப்படுத்தப்படாதது

நன்றி விகடன்.com: மனுவுடன் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளிப் பெண்! சிகிச்சையளித்து உதவிய திமுக எம்எல்ஏ

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனுவுடன் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு எம்.எல்.ஏ சரவணன் சிகிச்சையளித்து உதவினார். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிப் பெண் சசிகலா. தனக்கு உதவி கோரி எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது, மயங்கி விழுந்த சம்பவம் பலரையும் கலங்க வைத்தது. கணவரால் கைவிடப்பட்டு ஆதரவின்றி இருதய பிரச்சினை உள்ள குழந்தையுடன் கஷ்டப்படும் சசிகலா, தனக்கும் தன் குழந்தைக்கும் உதவி வேண்டும் என திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் சரவணனிடம் மனு […]

Categories
செய்தி உலா

“சரண்யாவின் இறப்பிற்கு நீதி வேண்டும்!” மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கடிதம்

ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 மாநிலத்தில் முழுமையாகவும், வலிமையாகவும் அமல்ப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு, ஊனமுற்றோருக்கான பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு குழுவினை ஏற்படுத்திட வேண்டும்