Categories
braille education in general schools court

நன்றி ஒன் இந்தியா: ஆசிரியர் பயிற்சி முடித்த ஒரு மாற்றுத்திறனாளிக்குகூட பணி வழங்காத அரசு உதவி பெறும் கல்லூரிகள்

மாற்றுத்திறனாளிகள் வழக்கு:   சென்னை:அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வரும் 26ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் காலேஜ் ஸ்டூடன் அண்ட் கிராஜுவேட் அசோசியேசன் ஆப் தி பிளைண்ட் உள்ளிட்ட சங்கங்களின் சார்பாக மணிக்கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் […]

Categories
announcements of district collectors

நன்றி இந்து தமிழ்த்திசை: – புதுக்கோட்டையில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் இன்று (செப்.4) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். இதில், 74 கோரிக்கை மனுக்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் […]

Categories
agitation

தலைமைச்செயலரோடு பேச்சு வார்த்தை: – முடிவுக்கு வந்தது போராட்டம்:

 “மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ஐ முறையாக அமல்படுத்திட, சிறப்பு ஆணையரை நியமிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சுமார் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோட்டை முற்றுகைப் போராட்டம் தலைமைச்செயலரின் சுமூகமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.    கடந்த 29.ஆகஸ்ட்.2019 அன்று நடைபெற்ற போராட்டமும் அதற்குப் பிறகான கைது நடவடிக்கைகள் குறித்து பல பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.   கோட்டையை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகளை இடைமறித்துக் கைது செய்த காவல்த்துறையினர் அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு […]

Categories
sports

கிரிக்கெட் அணிக்கு அங்கீகாரம் தர கோரிக்கை 

நன்றி இந்து தமிழ்த்திசை சென்னை  மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியை தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாற் றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரி யத்தின் மேலாளர் மஞ்சு பிரியா கூறியதாவது: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் 7 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த வாரியத்தைச் சேர்ந்த வீரர் களை மும்பையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய […]

Categories
employment training for VI

பார்வையற்ற நண்பர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புத் திறனை வளர்த்துக்கொள்ள, கர்ணவித்யா வழங்கும் ஓர் அறிய வாய்ப்பு.

கர்ண வித்யா தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான திறன் வளர் பயிற்சியை நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக Hr executive, data analyst, computer instructor, accessibility tester and customer supports போன்ற பதவிகளுக்கான பயிற்சியை வழங்கி அதில் சிறப்பாக செயல்படுபவர்களை பணியில் அமர்த்துகிறது. இந்தப் பயிற்சியானது அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயின்று பணியில் அமர்ந்த நண்பர்களின் சில துளிகள்.  மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும் விவேக் 7092877688 இ-மெய்ல் kvf.mobilizer@gmail.com Venue; […]

Categories
braille education braille education in general schools

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பிரெய்லி கற்க முடியாமல் தவிப்பு சிறப்பாசிரியர்களை நியமிக்க கோரிக்கை

 நன்றி இந்து தமிழ்த்திசை 21.ஆகஸ்ட்.2019மு.யுவராஜ் சென்னை  சாதாரணப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பிரெய்லி கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, பயிற்சி பெற்ற சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட பல்வேறு வகை யான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக 10 அரசு சிறப்பு பள்ளிகள் பிரத்யேகமாக செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகள் […]

Categories
Government Orders/letters/documents

நீண்ட நாட்களாகக் காலியாக இருக்கிற தலைமை ஆசிரியர்ப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பணிமூப்புப் பட்டியல்:

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 10 செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்கள் கடந்த ஆண்டே நியமிக்கப்படவிருந்த நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் அது தடைபட்டுவிட்டது.இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களால் அமைக்கப்பட்ட சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் முயற்சியால், தற்போது செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிமூப்புப் பட்டியல் வெளியாகி இருக்கிறது.வெளியிடப்பட்டுள்ள பணிமூப்புப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், அவை […]

Categories
சவால்முரசு

சுதந்திர தின விருதுகளில் மாற்றுத்திறனாளிகள் நலன்

ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும், முதல்வர் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக சிறப்பான பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பார். அதன்படி இந்த ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தை களுக்காக சென்னை சாந்தோமில் இன்ஃபினிட்டி பூங்கா அமைத்த சென்னை மாநகராட்சி பூங்கா துறைக்கு நல் ஆளுமைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலன் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டுநிறுவனத்துக்கான விருது வேப் பேரி ஆபர்சூனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக் கான பள்ளிக்கு வழங்கப்பட்டது. சிறந்த மருத்துவர் விருது கோவை முடநீக்கியல் மற்றும் […]

Categories
national education policy draft 2019

கருத்துகளுக்கு வலுச்சேருங்கள்

 புதிய கல்விக்கொள்கை வரைவு 2019ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி குறித்தோ, சிறப்புப் பள்ளிகள் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை. உள்ளடங்கிய கல்வியை அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்குமான ஒரே தீர்வாக வைக்கிற புதிய கல்விக்கொள்கையின் வரைவை மிகக் கடுமையாக எதிர்க்கிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். எனவே, எமது சங்கமானது, புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்தான தனது கருத்துகளைத் தொகுத்து அதனை நடுவண் அரசிற்கு அனுப்பியிருக்கிறது. எங்களின் கருத்துகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கீழே இருக்கிற தொடுப்பைக் க்லிக் செய்து […]

Categories
association statements

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகளின் சட்ட விரோத செயல்பாடு! அமைச்சர் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் ஆக-29 முதல் சென்னை கோட்டை தொடர் முற்றுகை!!

 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளுக்கு மாறாக பல்வேறு வகைகளில் வினையாற்றும் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எமது கூட்டியக்கம் கடந்த ஜூலை-10 முதல் சென்னை கோட்டை தொடர் முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. அந்நிலையில், ஜூலை-4 ஆம் தேதி தலைமை செயலகத்தில் எமது கூட்டியக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாநில சமூகநலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் இக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில் சிறிது கால அவகாசம் […]