
38 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து இன்று (09.02.2025) தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறையின் செயலராகப் பணியாற்றிய திருமதி. மதுமதி ஐஏஎஸ் அவர்கள், தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிறப்பு: 28.01.1967.
2003 பேட்சைச் சேர்ந்தவர். மாநில அரசின் குடிமைப்பணிகளில் பதவி உயர்வின் மூலம் ஐஏஎஸ் ஆன இவர், கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியராகப் பதவி வகித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் செயலராகப் பதவி வகித்த இவரைத் தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலராகப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
