
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டம் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
அரசுக்கு எத்தகைய நிதிச் சிக்கல்கள் இருந்தாலும், சமூகநீதிக்கே முதல் முன்னுரிமை என்று தனது ஆட்சிக்காலத்தை அர்ப்பணித்திருக்கிறார் மாண்புமிகு தமிழக முதல்வர். அவருக்கு பார்வையற்றோரின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இது ஒரு புதிய தொடக்கம். இனிவரும் காலங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பார்வையற்றோருக்கு ஒரு விழுக்காடு பணி கண்டிப்பாக ஒதுக்கப்படும் என்ற வரலாற்று வாசலை திறந்து வைக்கப் போராடிய அனைத்து பார்வையற்றவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
