தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.
Month: May 2021
ஒரு முக்கியப் பின்னூட்டம்
ரொம்ப நன்றி சார். காலச்சூழலுக்கு உகந்த பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள். இதுபோன்ற காலகட்டங்களுக்கு தயாரிக்கக்கூடிய வளைதளங்களாக இருக்கட்டும், அல்லது நிரந்தரமாகக் குறிப்பிட்ட அலுவல் சார்ந்த வலைதளங்களாக இருக்கட்டும் இவைகளை அரசாங்கம் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து அதைச் செய்கிறார்கள். இதுபோன்ற சூழலில் அரசுக்கும் அந்த நிறுவனத்துக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையில் நாமும் இருக்கிறோம். கட்டுரையில் நீங்கள் சொல்லியிருக்கிற accessibility tester பணிக்கான நபரை நிறுவனம் நியமிக்காமல் அரசே நியமிக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவருக்கும் […]
ஒரு இணையதளம் அதிலும் அரசின் சார்பில் பொது மக்களின் அவசியமான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்படும் இணையதளம் என்பது, அனைவரும் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் எளிதாக அணுகும்படியாக (easy to access) வடிவமைக்கப்படுவது கட்டாயம்.
தமிழக அரசால் நேற்று 21 ஐஏஎஸ்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள், சமூகப் பாதுகாப்புத்துறையின் ஆணையராகப் பணியாற்றிவரும் திரு. R. லால்வீனா ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போதைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் திரு. விஜயராஜ்குமார் ஐஏஎஸ் அவர்களுக்குப் பதிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்திருக்கும் இந்த 20 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக மேற்கண்ட நடவடிக்கைகளை நாமும் பட்டியலிடலாம்.
தமிழக அரசு மாவட்ட அளவில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையங்களின் தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. பார்வை மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை ஒருங்குறி வடிவில் கொடுத்துள்ளோம். குறிப்பு-முதல்நாள் வழங்கப்பட்ட எண்களில் சில மாற்றங்களைச் செய்து, தமிழக அரசு புதிய பட்டியலினை இன்று 20 மே 2021 வெளியிட்டுள்ளது. எனவே முந்தைய பட்டியல் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணையைப் படிக்க ஒருங்குறி வடிவில் K. ஜெயநிதி
தனியாள் இடைவெளிகள் கராராகப் பேணப்பட வேண்டிய இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையத்திற்கு வரவேண்டும் என அரசு எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.
தூய்மையான, வெளிப்படையான ஆட்சியாக நடத்த நான் விரும்புகிறேன். விரும்புவதோடு மட்டுமில்ல, தூய்மையான வெளிப்படையான ஆட்சியை நடத்துவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மறுவாழ்வு அலுவலர்களும் தங்கள் அலைபேசித் தொடர்பு எண்களை வழங்க முன்வரலாம்.
அந்த மாமனிதரின் அடிச்சுவடைப் பின்பற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதில் மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
