Categories
செய்தி உலா

நிவார் புயலால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இலவச எண்ணை அறிவித்தது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

உதவிமைய எண்: 18004250111
பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு: 9700799993

for the Wollare

உங்கியாங்கள்

டு

ழடு

தலையற்ற

வாய்

பழையே

வெல்லும்

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்

சென்னை நிவர் புயலின் விளைவாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மாற்றுத்திறனாளிகள் , தமிழ்நாடு அரசு அறிவிப்புகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படுமாறும் , புயல் மழையால் ஏதேனும் இடர்பாடுகள் மற்றும் சிரமங்கள் ஏற்படின்

ஹெல்ப்லைன் எண் -18004250111 ல் தொடர்புகொண்டு உதவி நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

பேச்சு மற்றும் செவிதிறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் 9700799993 என்ற எண்ணில் வாட்ஸ்அப் வீடியோ காலிங் மூலம் தொடர்புகொண்டு தங்கள் கோரிக்கைகளைப் பதிவிடலாம் .

கரோனா நிவாரணத்திற்காகத் தொடங்கப்பட்ட அழைப்பு மையத்தின் எண் 18004250111. இதனையே நிவார் புயலால் பாதிக்கப்பட்டு, உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அழைக்கலாம் என தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் காணொளிக் காட்சி மூலம் தங்கள் பிரச்சனைகளைப் பேசி உதவிபெற 9700799993 என்ற எண்ணில் தொடர்புகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. எனினும் இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகளை கடைநிலை மாற்றுத்திறனாளிகளும் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.