AICFB Zoom Meeting பார்வையற்றவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா?மறைக்கப்படும் தகவல்களை வெளிக்கொணர இயலுமா? இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள, இன்று 20.06.2020 நண்பகல் 12.00 மணி அளவில்,“தகவல் அறியும் உரிமைச் சட்டம்பயன்பாடும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும்” என்ற தலைப்பில்அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறுஅகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு(All India Confederation of the Blind)இணைய வெளி கருத்தரங்கம்குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.நாள் : […]
Month: Jun 2020
பார்வையற்றோர் ATM, Net Banking, cheque book, Loan வசதிகளைப் பெற இயலுமா? வங்கி கடன்களில் பார்வையற்றோருக்கு ஏதேனும் சலுகைகள் உள்ளதா?இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள ,19.06.2020 இன்று நண்பகல் 12.15 மணி அளவில், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பால், பார்வையற்றோருக்கான வங்கி சேவைகள் என்ற தலைப்பில்நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறு ஏஐசிஎஃப் பியின் அலுவலகம் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு(All India Confederation of the Blind)இணைய வெளி கருத்தரங்கம்குறிப்பு : […]
18 ஜூன், 2020 நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால், அனைத்து மாநிலங்களுக்குமான இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைப் புத்தகம் ப்ரக்யாதா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உடல்நலம், பாதுகாப்பு போன்றவை தொடர்பான அறிவுரைகளும் அக்கறைகளும் பேசப்பட்டுள்ளன. அதேசமயம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இணையவழி கற்றல் கற்பித்தல் குறித்து வெறுமனே ஐந்து வரையறைகளுடன் கடந்திருப்பது, மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் அக்கறைகொண்டோரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 20 பக்கங்களைக் […]
ஜூன் 18, 2020 நன்றி தி இந்து ஆங்கிலம்: குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் வலிப்பு மற்றும் கால்கை வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்தும் விகாபத்ரின் மாத்திரைகளுக்குத் தற்போதைய ஊரடங்கு காரணமாக, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைப் பத்திரிக்கை செய்திகளும் பல மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோரும் உறுதிசெய்தனர். இதையடுத்து, தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முயற்சியால், பல்துறை ஒத்துழைப்போடு, சுமார் எட்டு லட்சம் செலவில் 3400 விகாபத்ரின் மாத்திரைகள் தருவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு மற்றும் […]
ஜூன் 30, 2020 அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் அவர்களால் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 5000 கேட்டுப் போராடியவர்களுக்கு ரூ. 1000 என்பது போதாத தொகைதான் என்றாலும், முதல்வரின் இந்த அறிவிப்பை ஒரு துவக்கமாகவும், தங்களின் தொடர் வலியுறுத்தல்களுக்குக் கிடைத்திருக்கிற சிறிய வெற்றியாகவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்கள் கருதுகின்றன. முதல் மற்றும் இரண்டாம் ஊரடங்கு […]
கரோனா பேரிடர் காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாகவும், துறையின் இந்தப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர் திரு. அ. மணிக்கண்ணன் அவர்கள் நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்தத் துறையில் இருக்கக்கூடிய சாபக்கேடான சிக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள் குறித்து எவ்வித புரிதலும் அற்ற, அல்லது அவர்கள் சார்ந்து இயங்குவதற்கான பயிற்சி ஏதும் பெறாத அதிகாரிகளை தொடர்ச்சியாக பணி அமர்த்துவதில் இருந்து தொடங்குகிறது எனவும், […]
பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் மூன்றாவது இணையவழிக் கருத்தரங்கம் இன்று, 14 June-2020, நியாயிரு காலை 10.30 மணிக்கு! பார்வையற்றோருக்குப் பெருகிவரும் பணிவாய்ப்புச் சிக்கல்கள்!Zoom இணைப்பு இதோ! https://us02web.zoom.us/j/89513060230 Meeting ID: 895 1306 0230வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் மூன்றாவது […]
இளங்கலையில் கலை, அறிவியல், வணிகம் மற்றும் சிறப்புக் கல்வியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்றுவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படி ஃபார் ஸ்டடி இந்தியா (buddy for study India) என்ற அறக்கட்டளை சர்தார் படேல் உதவித்தொகை திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உண்மையில் தேவையுடைய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களின் இளங்கலைப் படிப்பை நிறைவுசெய்ய உதவுவதேஇந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இறுதித் தேதி: – ஜூன் 30 2020 விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்: 1.கலை, அறிவியல், […]
தலைவர் சித்ரா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்புப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயின்றுவரும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதும் பொருட்டு, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல சிறப்பானதொரு முறையில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதோடு, முதல்வரின் தேர்வு ரத்து என்கிற அறிவிப்பிற்குப்பிறகு அதே நடைமுறையைப் பின்பற்றி, சிறப்புப் பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்திருக்கிறது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களே எனினும், மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்புத் […]
கரோனா பேரிடர் கால ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஜூன் 10 முதல் மாற்றுத்திறனாளி உரிமைகள் கூட்டு இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டம், பன்மடங்காகப் பெருகிவரும் கரோனா தொற்று காரணமாகக் கைவிடப்படுவதாக கூட்டு இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ” கொரோனா பேரிடர் ஊரடங்கு நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதம் . ரூ .5000 / – வழங்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை […]
