Categories
corona differently abled commissioner differently abled department differently abled news news about association

அறுபது நாட்களுக்குப்பின் ஒன்றிணைந்த பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம், ஆணையரின் நடவடிக்கைக்கு குவிகிறது பாராட்டு

 மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் உடனடி நடவடிக்கையால், அறுபது நாட்களுக்கும் மேலாகப் பிரிந்திருந்த பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிணைந்தது. திருவள்ளூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதிகள் மாரிமுத்து பிரியா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மாரிமுத்து இரயிலில் வணிகம் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக அரசால் முதல்கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. உறவினரின் குடும்ப நிகழ்வில் பங்கேற்க தனது இரண்டு வயது மகனுடன் செங்கற்பட்டு வந்த பிரியாவால் திருவள்ளூர் திரும்ப […]

Categories
corona differently abled news differently abled teacher

“இந்த ஆண்டு மட்டுமாவது மே மாத ஊதியம் தரவேண்டும்” அரசுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

படக்காப்புரிமை தி இந்து ஆங்கிலம்  கடந்த 2012 ஆம் ஆண்டு, மாதம் 5000 என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் சுமார் 16549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாகப் பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் 200 மாற்றுத்திறனாளி பகுதிநேர ஆசிரியர்களும் அடங்குவர்.ரூ. 5000 தொகுப்பூதியம் ரூ. 7700 ஆக உயர்த்தப்பட்டபோதிலும், ஒரு வருடத்தின் 11 மாதங்கள் மட்டுமே இவ்வகைப் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. மே மாதம் ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. தற்போதைய கரோனா […]

Categories
corona differently abled news from the magazine relief pension

‘1000 மாதாந்திர உதவித்தொகையை 3000 ஆக உயர்த்துக’ அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

படக்காப்புரிமை டைம்ஸ்நவ் நன்றி டைம்ஸ் நவ்: சென்னை பல்லாவரத்தின் புனித செபாஸ்டின் குடியிருப்பில் வசிக்கும் பதினெட்டு பார்வையற்ற குடும்பங்கள் ஒன்றிணைந்து ஓர் இசைக்குழுவை நடத்திவருகின்றனர். தற்போதைய கரோனா ஊரடங்கு காரணமாக, சமூக, கலாச்சார மற்றும் பல்வேறு மத நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அனைவருமே வருமானம் ஏதுமின்றி, வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கின்றனர். குழுவில் ஒருவரான தண்டபாணி, தற்போது அமல்ப்படுத்தப்பட்டிருக்கும் “ஊரடங்கின் காரணமாக நாங்கள் வருமானம் இழந்து தவித்து வருகிறோம். சாதாரண நாட்களில் ஒரு மாதத்தில் 15 கச்சேரிகள் கிடைத்துவிடும். […]

Categories
from the magazine

இதழ்களிலிருந்து: இருளில் ஒளியாவோம், இருவரும் விழியாவோம்!

நன்றி ஆனந்தவிகடன்   இருவர் மட்டுமே வசிக்கும் அந்த வீடு அன்பாலும் காதலாலும் நிறைந்திருக்கிறது. பார்வைத்திறன் இல்லாத மகேந்திரனும் ஷோபனாவும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் எல்லா வலிகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டாலும், இன்று மதிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளனர். மகேந்திரன் உதவிப் பேராசிரியராகவும், ஷோபனா அரசுப் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றுகிறார்கள். இவர்களை இணைத்ததுடன், இவர்களின் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது காதல்! “பிறந்தபோதே பார்வைத்திறன் குறைபாடு இருந்துச்சு. அஞ்சாவது படிக்கிறப்போ சுத்தமா பார்வை தெரியலை. ‘இனிமேல் குணப்படுத்த முடியாது’ன்னு ஆஸ்பத்திரியில சொல்லிட்டாங்க. ஆறாவதுல இருந்து பூந்தமல்லி […]

Categories
seminar

நிகழ்வு: பெருமிதங்களோடு தொடர்கிறது பேரவையின் பயணம்

12 மே 2020 அன்று, மாலை 3.30 மணிக்கு பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் பெண்கள் என்ற தலைப்பின்கீழ் நெறியாளர் சகிதம் நான்கு பெண்கள் எழுபது பங்கேற்பாளர்களோடு மேற்கொண்ட இணக்கமான உரையாடலில், இதுவரை சிந்திக்காத புதிய கோணங்களும், பல எளிய புரிதல்களும் இதயத்தைக் கிளறின. வெண்ணிலா டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை மேற்கொண்டுவரும் வெண்ணிலா அவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தளங்களில் பார்வையற்ற […]

Categories
examinations

ஜூன் முதல் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, குழப்பத்தில் தவிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்கள்

நேற்று, மே 12 ஆம் தேதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எதிர்வரும் ஜூன் முதல் தேதி தொடங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. அமைச்சரின் இந்த அறிவிப்பு, உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பல்வேறு கேள்விகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய சிறப்புப் பள்ளி மாணவர்கள் என்ன […]

Categories
corona differently abled news

இணையம்: துணையாக இருந்தவர் இறந்தது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்த மூதாட்டி!

நன்றி மின்னம்பலம்சென்னை மயிலாப்பூர் பகுதியில் மூன்று சக்கர வண்டி ஒன்றை வீடாக மாற்றி சாலையோரம் வசித்து வந்தவர்கள் தங்கப்பன் மற்றும் ஜெயா. 65 வயதாகும் ஜெயா, 70 வயது தங்கப்பனிடம் காலையில் பேசியபடியே தனது நாளை துவங்குவது வழக்கம். அதுபோல ஞாயிற்றுகிழமை அவர் பேசிக்கொண்டிருக்கையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தங்கப்பன் ஏற்கனவே இறந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.அந்த பகுதியில் வசிப்பவர்கள் அவர்களுக்கு காலை உணவு வழங்க வந்தபோது, தங்கப்பன் இறந்தது அவர்களுக்கு தெரியவர பார்வையற்ற […]

Categories
important programs seminar

நிகழ்வு: பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கம் மே_2020! கருத்தரங்கில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்? சமூக,, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் பார்வையற்ற பெண்கள்

12 மே 2020, செவ்வாய் பிற்பகல் 3.30 மணிக்கு! கருத்தரங்கில் பங்கேற்பதற்கான ஜூம் இணைப்பு  Meeting ID: 840 1586 3576 கருத்தரங்கில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்?நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்,உங்கள் திறன் பேசி அல்லது கணினியில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.  கூகுல் ப்லே ஸ்டோரில் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் விண்டோசுக்கான செயலியைத் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் செயலியைத் திறந்தால், join meeting என்ற இடத்தில் சொடுக்கினால், உங்கள் பெயர் மீட்டிங் பாஸ்வேர்ட் கேட்கும். பெயர் என்ற […]

Categories
agitation association statements news about association

“கொரோனா பேரிடர் நிவாரண நிதி குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்காவிட்டால்… மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தீவிரமடையும்” தலைவர்கள் எச்சரிக்கை

 கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் குடும்பங்களில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்க வலியுறுத்தி கருப்பு சின்னம் அணிந்து அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டங்கள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வியாழன் (மே 7, 2020) அன்று நடைபெற்றன. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அடக்குமுறைகளை மீறி மாநிலம் முழுவதும் சுமார் 400 மையங்களில் இந்தப் போராட்டங்கள் […]

Categories
thoughts

சிந்தனை: கோஷங்களை முழக்கங்களாய் மாற்றுவோம்

படக்காப்புரிமை newzhook.com  கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, ரிஷிகேஷிலுள்ள இந்திய அறிவியல் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் திரு. ரவிகாந்த் அவர்கள், முன்யோசனையற்ற, மிகவும் பிற்போக்குத்தனமான, முற்றிலும் மனிதநேயத்திற்கு விரோதமான  ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அந்தச்சுற்றறிக்கையில், உடல் ஊனம் மற்றும் மனவளர்ச்சி குறைபாடு காரணமாக, தங்களின் பணிகளைச் சரிவர மேற்கொள்ளாத நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுக்கு நடுவண் அரசின் குடிமைப்பணிகள் நடத்தை விதிகளின்படி, (CCS Rules) கட்டாய பணி ஓய்வு வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. மேற்கண்ட சுற்றறிக்கையினைத் திரும்பப்பெற […]