சென்னை:
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வரும் 26ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் காலேஜ் ஸ்டூடன் அண்ட் கிராஜுவேட் அசோசியேசன் ஆப் தி பிளைண்ட் உள்ளிட்ட சங்கங்களின் சார்பாக மணிக்கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேசிய தகுதி தேர்வில் (NET) சுமார் 4 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு எந்த பணியும் வழங்கவில்லை. அரசு உதவி பெறும் கல்லூரிகளி்ல் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஷேஷசாயி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக உரிய ஆவணங்களுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனற்.
இது தொடர்பாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. அ. மணிக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

