கோட்டையை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகளை இடைமறித்துக் கைது செய்த காவல்த்துறையினர் அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்துவைத்தனர்.
அன்றைய இரவே தலைமைச்செயலர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இனிமேல் மாற்றுத்திறனாளிகளோடு தானே நேரடியாகப் பேசுவேன் என்ற உறுதியை அளித்ததோடு, கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறிதியளித்தார். தலைமைச்செயலரின் சுமூகமான அணுகுமுறையைக் கருத்தில்கொண்டு, போராட்டம் தற்காளிகமாக திரும்பப் பெரப்பட்டது.
இதனிடையே, மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்குநாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.







