மின்னிதழ் பற்றி

உடல்க்குறைபாடுகளில் அதிக முக்கியத்துவம் தந்து பொருட்படுத்த வேண்டிய ஒன்று பார்வையின்மையும் அதன் சவால்களும். இன்றைய சூழலில், மாற்றுத்திறனாளிகள் என்ற பொதுமைப்படுத்தலால், பார்வையின்மை அல்லது பார்வைக்குறைபாடு குறித்த சிந்தனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுச் சிந்தனையைப் பார்வைத்திறன் குறைபாட்டிலிருந்து தொடங்கிய முந்தைய காலகட்டம் ஒன்று இருந்தது. பார்வையின்மையிலிருந்து தொடங்கினாலும், அனைத்துத் தரப்பு ஊனமுற்றவர்களுக்கும் அது பயன்விளைவிப்பதாய் அமைந்தது. காரணம், பார்வையின்மையின் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் முழுக்க அகம் சார்ந்தவை, ஆழ்ந்த சிந்தனைகளைக் கோரக்கூடியவை

இன்றைய துரித காலகட்டத்தில், அகம், ஆழம் என்ற சொற்கள் பொருளிழந்துவிட்டன. இங்கு எல்லாமே ஹாபி, எதுவுமே லாபி என்ற வாசகம் படிப்படியாக ஒரு கோட்பாடாகவே மாறிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய அக இருண்மை சூழ் காலகட்டத்தில், நமக்கான அகல்களை நாம்தான் ஏந்திட வேண்டும். அப்படிப் பார்வைத்திறன் குறையுடையோருக்காக ஏற்றப்பட்ட முதல் ஞானவிளக்கு ‘விழிச்சவால்’. இப்போதும் சுடர்ந்துகொண்டிருக்கும் இரண்டாவது விளக்கு விரல்மொழியர். மூன்றாவதாகவும் ஒரு விளக்கை ஏற்றலாமே என்கிற உந்துதல் திரி, உழைப்பென்னும் நெய்யில் ஓயாது எரிய, ஒளிரத் தொடங்கியிருக்கிறது  தொடுகை மின்னிதழ்.

இது பார்வைச்சவால் குறித்துப் பேசும். பார்வைச்சவாலுடையோரின் குரல்களைப் பிரதிபளிக்கும். பார்வையற்றோர் அல்லது பார்வைத்திறன் குறையுடையோர் தொடர்பான நிகழ்ந்தன, நிகழ்வன குறித்து முடிந்தவரை ஆவணப்படுத்த முயலும்.

பார்வையற்றோர் தமக்குள் உறவாடி, பொதுச்சமூகத்தோடு உரையாடும் களமான தொடுகையின் மாறா விதி ஒன்று உண்டு. அது, பார்வையற்றவர்கள் அல்லது பார்வைத்திறன் குறையுடையவர்கள் எந்த ஒரு பொருண்மை குறித்தும் எழுதலாம், பிறரோ, பார்வையின்மை, பார்வையற்றோர் குறித்து மட்டுமே எழுத வேண்டும்.

ஆகவே, வாருங்கள் நண்பர்களே!

தொடுகையால் தோழமை கொள்வோம்,

தோழமையால் துயர்களை வெல்வோம்.

இதழிலிருந்து

  • கவிதை: அதிகாரத்தின் கனிவான கவனத்திற்கு
    நன்றி அறிவிப்பு: தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம்: “பொறியின்மை யார்க்கும் பழியன்று” நாள்: 24 ஆகஸ்ட் 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு. மீட்டிங் இணைப்பு: https://us06web.zoom.us/j/81472698712?pwd=RUp9ShfeuqC1dwzNvTj5Cu5THtiSIG.1 Meeting ID: 814 7269 8712 Passcode: 202324
  • கவிதை: பட்டணப் பிரவேசம்
    அரசுப்பணி நமது வாழ்வுரிமை என்பதை உரத்துச் சொல்லப் புறப்பட்டு வாருங்கள் தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம் ஒருங்கிணைக்கும் அறவழிப் போராட்டத்துக்கு. நாள்: ஆகஸ்டு 19, 2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி. இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். தொடர்புக்கு: தலைவர், எஸ். அசோக் பாலா: 9092508536 செயலாளர், சா. சந்தோஷ் குமார்: 8124718483 பொருளாளர்,S. போத்திராஜ். 9791520674. ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்!
  • ஏனென்றால், உன் பிறந்தநாள்
    எப்போவும் அது அப்படித்தான் சார். ‘எல்லாருக்கும் என்ன நடக்குமோ, அது எனக்கும் நடக்காமலா போயிரும்ங்கிற மிதப்பு. அதைவிடுங்க. போராட்டத்தப்ப ஜிவோ 20 பற்றி அதிகாரிங்க ஏதாச்சும் சொன்னாங்களா?
  • நிகழ்வு: உள் அரங்கும், உள்ள அரங்கும்
    உபசரிப்பு என்றால், “வாங்க வாங்க” என்று கைபிட்இத்து, அழைத்துச் செல்வதன் பொருட்டு சுமந்து செல்கிற பாவனையில், “பார்த்து காலை மெதுவா தூக்கி வையுங்க, படி, இன்னொரு படி” என நொடிக்கு நொடி சங்கடப்படுத்துகிற உரையாடல்களோ செய்கைகளோ எவரிடமும் இல்லை. எல்லோரும் இயல்பாகவே இருந்தார்கள்.
  • நிகழ்வு: மாற்றுத்திறனாளர் படைப்பாக்கப் பயிலரங்கம் – ஓர் இருட்டுடைப்பு
    பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு: https://thodugai.in